Sat ,Dec 02, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

பள்ளி கல்லூரிகளுக்கு அடுத்த 5 நாள் லீவு... வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்…

Gowthami Subramani November 07, 2022 & 12:15 [IST]
பள்ளி கல்லூரிகளுக்கு அடுத்த 5 நாள் லீவு... வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்…Representative Image.

தீவிரமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அடுத்த 5 நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில், திபு பெரு நகரத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக, அசாம் மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து, அசாம் முதல்வரான ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் சுகாதார அமைச்சர் கேசப் மகந்தா போன்றோரின் தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதில், திபு நகரில் தீவிர டெங்கு காய்ச்சல் பரவல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 20க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், திபு நகராட்சி வாரியம் மற்றும் திபு பெருநகர பகுதிக்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் உட்பட அங்கன்வாடி நிலையிலுள்ள பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை அனைத்து கல்வி நிலையங்களும் 5 நாட்களுக்கு மூடப்படுகிறது.

அதன் படி, இன்று முதல் வரும் 12 ஆம் தேதி வரை, அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெங்கு பரவலைத் தடுப்பதற்கு 10 சிறப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்