பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை எதுவும் கிடையாது. நாமா அவர்களா என ஒரு கை பார்த்து விடலாம் என தெரிவித்துள்ளார் அமித்ஷா.
ஜம்மு காஷமீர் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ள அமித்ஷா, பாகிஸ்தானை தனது வார்த்தைகளால் சீண்டியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் நிலவும் பிரச்னைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் பாஜக, அந்த பிரச்னைகளுக்கு தாங்கள் தீர்வு தருவதாக மக்களை நம்ப வைத்து வருகிறது.
இந்நிலையில், அந்த கூட்டத்தில் பேசிய அவர் ஜம்மு காஷ்மீரில் பயங்கர வாதத்தை முற்றிலுமாக ஒழித்து அதனை இந்தியாவின் சொர்க்கமாக்கவும் விரும்புவதாக கூறியுள்ளார். இந்தியாவிலேயே மிகவும் அமைதியான இடமாக ஜம்முவை ஆக்க நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…