உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் இது தொடர்பாக வெளியிட்ட பதிவில் முலாயம் சிங் யாதவுடன் இருக்கும் படங்களை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
"முலாயம் சிங் யாதவ் ஜி உ.பி மற்றும் தேசிய அரசியலில் தனித்துவம் மிக்கவர். அவர் அவசரநிலையின் போது ஜனநாயகத்திற்கான முக்கிய சிப்பாயாக இருந்தார். பாதுகாப்பு அமைச்சராக, வலிமையான இந்தியாவுக்காக உழைத்தார். அவரது பாராளுமன்ற தலையீடுகள் நுண்ணறிவு மிக்கவை மற்றும் தேசிய நலனை மேம்படுத்துவதற்காக செலவிடப்பட்டது." என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
"முலாயம் சிங் யாதவ் ஜியுடன் நாங்கள் அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சராக இருந்தபோது பலமுறை தொடர்பு கொண்டேன். நெருங்கிய தொடர்பு தொடர்ந்தது. அவருடைய கருத்துகளைக் கேட்க நான் எப்போதும் ஆவலுடன் இருந்தேன். அவரது மறைவு எனக்கு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் லட்சக்கணக்கான ஆதரவாளர்களுக்கும் இரங்கல்கள். ஓம். சாந்தி” என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றொரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக உடல்நலக்குறைவால் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முலாயம் சிங் யாதவ் இன்று காலமானார்.
இந்நிலையில், பிரதமர் மோடியைத் தொடர்ந்து பல்வேறு தேசிய மற்றும் மாநில தலைவர்களும் முலாயம் சிங் யாதவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…