இன்று அகமதாபாத்தில் இருந்து காந்திநகர் செல்லும் போது, பிரதமர் நரேந்திர மோடியின் கான்வாய் ஆம்புலன்ஸுக்கு வழிவிட சிறிது நேரம் நிறுத்திவைக்கபப்ட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
முதலில் குஜராத் பிஜேபியால் பகிரப்பட்ட ஒரு வீடியோ, பிரதமரின் கான்வாயில் ஒரு பகுதியாக இருந்த இரண்டு எஸ்யுவிகள், ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவதற்காக அகமதாபாத்-காந்திநகர் சாலையில் மெதுவாக இடதுபுறமாக நகர்வதைக் காட்டுகிறது.
இன்று பிற்பகல் அகமதாபாத்தில் உள்ள தூர்தர்ஷன் சென்டர் அருகே தனது பொது பேரணியை முடித்துக் கொண்டு காந்திநகரில் உள்ள ராஜ்பவனுக்கு பிரதமர் மோடி சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
"அகமதாபாத்தில் இருந்து காந்திநகர் செல்லும் வழியில், பிரதமர் மோடியின் வாகன அணிவகுப்பு ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவதற்காக நிறுத்தப்பட்டது" என்று குஜராத் பாஜக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தனது குஜராத் பயணத்தின் இரண்டாவது நாளில், காந்திநகர்-மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார், மேலும் அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தையும் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…