Rain Update : தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருப்பத்தூர், வேலூர் ஆகிய 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய்யம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஊத்தங்கரை, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் அதிகபட்சமாக தலா 8 செ.மீ மழை பெய்துள்ளது. மேலும், சோலையார், கரூர் பரமத்தி ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…