மத்திய பிரதேச மாநிலத்தில் கொள்ளையர்கள் மிகவம் விசித்திரமான முறையில் கொள்ளையடித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள வீடுகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடந்து வரும் நிலையில், கொள்ளை கும்பலை கையும் களவுமாக பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
அப்போது 4 பேர் கொண்ட கும்பலை பிடித்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் 12க்கும் மேற்பட்ட திருட்டுகளில் ஈடுபட்டுள்ளதை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அவர்கள் கொள்ளையடித்த ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், இந்தக் கொள்ளையர்கள் திருடும்போது, செருப்புகளை கைகளில் கொண்டு சென்றுள்ள விசித்திர குறித்து விசாரிக்கையில், செருப்பு அணிந்தால், நாய்களுக்கும், மக்களுக்கும் சத்தம் கேட்டு விழித்துக் கொள்வார்கள் என்பதால், அவ்வாறு செய்வதாக கூறியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…