தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து 3 ஆவது நாளாக நீடித்து வருகிறது. இதனால், இன்றைய தினமும் 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்னும் 5 நாள்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், தமிழகத்தில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வட இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், வடகிழக்கு பருவமழை வலுப்பெற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் என அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, போன்ற மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து குறிப்பிட்ட மாவட்டத்தின் ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…