மாணவிகளின் கழிவறையில் ரகசிய கேமரா வைத்து வீடியோக்களை எடுத்த மாணவன் ஒருவனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரில் தனியார் கல்லூரி ஒன்றில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் மாணவியர்களின் கழிவறையில் மாணவன் ஒருவர் ரகசிய கேமரா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் விசாரணை செய்த போது, அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவனின் செல்போனில் கல்லூரி மாணவிகள் கழிவறையில் இருந்த போது எடுக்கப்பட்ட 2,000-ற்கும் அதிகமான ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த போனில் மாணவர்களின் அந்தரங்க போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து வெளிவந்த தகவலின் படி, அந்த மாணவன் முன்னரே இதே குற்றத்தில் ஈடுபட்டதாகவும், அதற்கு மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் கல்லூரி நிர்வாகம் போலீசில் புகார் அளிக்கவில்லை. இந்நிலையில், அந்த மாணவன் தற்போது மீண்டும் அதே தவறை செய்துள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.
தவறு செய்த மாணவன் மீது போலீஸ் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியுள்ளனர். இது குறித்து, விசாரணை முழுமையாக முடிந்த பின்னர், அந்த மாணவன் மீது எந்த பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்படும் என்ற தகவல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…