Crime : திருச்சியில் வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பாலியல் தொல்லை
திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த பிளஸ் 2 பள்ளி மாணவி ஒருவர் தனியாக வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில், அவருடைய வீட்டிற்கு அடிக்கடி வந்த முத்து என்ற 50 வயது விவசாயி பிளஸ் 2 மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
போக்சோ
இந்நிலையில், இது குறித்து பிளஸ் 2 மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிபடையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், தனியாக இருந்த பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது முத்து என்பவரை கைது செய்தனர்.
கண்டனம்
மேலும், 50 வயது விவசாயி முத்து மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் தனது மகள் வயது உள்ள பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் விவசாயி முத்துவுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…