Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,863.26
10.32sensex(0.01%)
நிஃப்டி22,401.30
-1.10sensex(-0.00%)
USD
81.57
Exclusive

'என்னை கொன்றுவிடுவான்'.. ஷ்ரத்தா வாக்கர் கொலையில் அடுத்தடுத்த திருப்பம்.. அலட்சியம் காட்டியதா போலீஸ்...??

Editorial Desk Updated:
'என்னை கொன்றுவிடுவான்'.. ஷ்ரத்தா வாக்கர் கொலையில் அடுத்தடுத்த திருப்பம்.. அலட்சியம் காட்டியதா போலீஸ்...??Representative Image.

இந்திய தலைநகரான டெல்லியில் நடந்த கொலை சம்பவம் நாட்டு மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து புதிய பல தகவல்கள்  போலீஸார் விசாரணையில் வந்த வண்ணம் உள்ளது . ஷ்ரத்தா வாக்கர் என்ற இளம் பெண்ணை அவரது காதலனான "அப்தாப் பூனாவாலா" என்ற நபர் 35-துண்டுகளாக வெட்டி கொன்றுள்ளான் , மேலும் அவன் அந்த பெண்ணை பல  மாதங்களுக்கு முன்பே கொன்று பல துண்டுகளாக வெட்டி தனது வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்ததாகவும்,பின்பு அந்த பெண்ணின் உறுப்புகளை இரவில் சென்று பலபகுதிகளில் வீசியதகாவும் கூறியுள்ளான்.

'என்னை கொன்றுவிடுவான்'.. ஷ்ரத்தா வாக்கர் கொலையில் அடுத்தடுத்த திருப்பம்.. அலட்சியம் காட்டியதா போலீஸ்...??Representative Image

கொலைசெய்த பிறகு  அதை மறைக்க இணையதளத்தில் பயிற்சி:

இத்தனை செயல்களையும் இணையதளத்தின் உதவியுடனும் மேலும் அமெரிக்காவின் "டெக்ஸ்டர்" தொடரில் வரும் கட்சிகளின் மூலம் கற்றுக்கொண்டதாகவும் "அப்தாப் பூனாவாலா" கூறியதாக  திடுக்கிடும் தகவல்கள் போலீஸ் விசாரனையில் வெளிவந்தது. ஷ்ரத்தா வாக்கர் கொன்றதற்கான முக்கிய காரணமாக கொலையாளி  "அப்தாப் பூனாவாலா" கூறியது, அவர்கள் இருவரும் பலநாட்களான காதலித்து வந்ததாகவும் மேலும் 2 வருடங்களாக ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும்  இதற்கு இடையில் பலமுறை தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி   ஷ்ரத்தா வாக்கர் கேட்டதாகவும் ஒருநாள் அந்த வாக்குவாதம் முற்றி அந்த பெண்ணை கொன்றதாகவும் கூறியுள்ளான் இது மேலும் மக்கள் இடையில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

'என்னை கொன்றுவிடுவான்'.. ஷ்ரத்தா வாக்கர் கொலையில் அடுத்தடுத்த திருப்பம்.. அலட்சியம் காட்டியதா போலீஸ்...??Representative Image

புதிய ஆதாரத்தால் பரபரப்பு :

இப்படி பல தகவல்கள் வந்த நிலையில் புதிய தகவலாக "ஷ்ரத்தா வாக்கர்" தனக்கு அப்தாப் பூனாவாலா என்ற நபரால் நடக்கும் கொடுமைகளை பற்றி  போலீசுக்கு 2020-லேயே எழுதியதாக  ஒரு கடிதம் கிடைத்துள்ளது .

அந்த கடிதத்தில்  தனது காதலன் "அப்தாப் பூனாவாலா" கடந்த ஆறு மாதங்களாக தன்னை அடிப்பதாகவும் மேலும் இதை பற்றி யாரிடமாவது சொன்னால் தன்னை கொன்றுவிடுவதாக மிரட்டியதாக அதில் கூறியுள்ளார். இந்த கடிதத்தை புதிய ஆதரமாக வைத்து போலீசார் தங்களது அடுத்த கட்ட விசாரனையை தொடங்கியுள்ளனர் . நாட்டு  மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உலுக்கிய இந்த கொலை சம்பவத்திற்கு போலீஸ் விசாரனையின் முடிவில் என்ன தண்டனை கிடைக்கும் என்றும்  இனிமேல் இப்படிபட்ட சம்பவங்களை தவிர்க்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்   பொறுத்திருந்து பார்ப்போம் .


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்