டெல்டா மாவட்ட பயணிகளின் கோரிக்கையை ஏற்று அண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம், மயிலை வழியாக திருவண்ணாமலைக்கு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
திருச்சி வேலூர் இடையே இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில் டிசம்பர் 6 மற்றும் 7ம் தேதிகளில் காலையில் 05.40 மணிக்கு திருச்சியில் புறப்படும். தொடர்ச்சியாக தஞ்சையில் காலை 06.35க்கும், பாபநாசத்தில் காலை 06.56க்கும், கும்பகோணத்தில் காலை 07.10 க்கும், மயிலாடுதுறையில் காலை 08.25 மணிக்கும் பயணித்து, காலை 11.50 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறு மார்க்கத்தில் அதே தினங்களில் வேலூரில் இரவு ஒன்பது மணிக்கு புறப்பட்டும் ரயிலானது, திருவண்ணாமலைக்கு 10.20க்கும், மயிலாடுதுறைக்கு மறுநாள் அதிகாலை 02.40க்கும், கும்பகோணத்திற்கு 03.15க்கும், பாபநாசம் - 03.30க்கும், தஞ்சைக்கு 4 மணிக்கும், திருச்சிக்கு அதிகாலை 5 மணிக்கும் சென்றையும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…