கடுக்காய் தொழிற்சாலை கேட்ட எம்எல்ஏ உறுப்பினரின் கோரிக்கைக்கு அரசு கடுக்காய் கொடுக்காது என மிடுக்காய் பதில் அளித்த அமைச்சரால் அமைவயில் எழுந்த சிரிப்பலை.
இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் பேசுகையில், "காலையில் இஞ்சி, நன்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் உண்டு காலை ஊண்றி கோலை வீசி குலுங்கி நடப்பார் என்று கூறுவார்கள். கடுக்காய் சாப்பிட்டவர்கள் மிடுக்காய் நடப்பார்கள் என்றார்கள்.
எங்கள் கழுவாயன் மலையிலும், சேலம் மாவட்டத்தில் இருக்கும் சின்ன கழுவாயன் மலையிலும் கடுக்காய் அதிகமாக கிடைக்கிறது. சிறு தரகர்களால் அந்த மக்களுக்கு உரிய தொகை கிடைக்காமல் இருக்கிறது.
ஆகவே சாயம் தயாரிப்பதற்கும், மருத்துவ குணம் கொண்ட கடுக்காய் தொழிற்சாலை சங்கராபுரம் தொகுதியில் உருவாக்கி தர அமைச்சர் முன் வருவராக என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு, "உறுப்பினரின் கோரிக்கைக்கு அரசு கடுக்காய் கொடுக்காமல் இருக்கும்", என்றார். இதைக் கேட்ட உறுப்பினர்கள் புன்னகைத்ததால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…