திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருக்கார்த்திகை தீப திருவிழா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் பொதுபணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ. வ. வேலு தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, பொதுமக்கள் அனுமதி இன்றி அன்னதானம் மேற்கொண்டால் அதை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கிரிவல பாதையில் நடைபாதையை ஆக்கிரமித்து கடை வைத்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கிரிவலப் பாதையில் ஒலிப்பான்களை கொண்டு ஒலி எழுப்பினால் அதை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும், டிசம்பர் 6ம் தேதி பாபரின் மஸ்ஜித் இடிக்கப்பட்ட தினம் என்பதால் கோவிலை சுற்றி இருசக்கர வாகனம், கார், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களை காவல்துறையினர் அனுமதிக்க கூடாது என்று அமைச்சர் எ. வ. வேலு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…