தூத்துக்குடி கடல் நீர் திடீரென பச்சை நிறத்தில் காட்சியளித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடல் துறைமுகத்திற்கு பேர் போன தூத்துக்குடி பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. அப்படி இருக்கையில் இன்று தூத்துக்குடி புதிய துறைமுகம் கடல் பகுதியில் திடீரென கடல் நீர் பச்சை நிறத்தில் காட்சியளித்துள்ளது. அதனால் பீதியடைந்த மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் இது குறித்து தகவல் தெரிவித்தனர். மேலும் இப்படி பட்ட சம்பவம் நடக்கையில் ஆமை ஒன்று இறந்து கரை ஒதிங்கியுள்ளது. இதனால் தான் இப்படி நடந்ததா என்று மீனவர்கள் பயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து மீன்வளத்துறையினர் விசாரணை மேற்கொண்டு நடந்ததை விளக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…