Wed ,Sep 27, 2023

சென்செக்ஸ் 66,118.69
173.22sensex(0.26%)
நிஃப்டி19,716.45
51.75sensex(0.26%)
USD
81.57
Exclusive

தமிழகத்திற்கு ஜூலை.2ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு - மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை..!

Saraswathi Updated:
தமிழகத்திற்கு ஜூலை.2ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு - மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை..! Representative Image.

தமிழத்தில் வரும் 2ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேநேரத்தில் வங்கக் கடலில் சூறவாளி காற்று வீசிவருவதால் மீனவர்கள் ஜூலை 2ம் தேதி கடலுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வீசும் மேற்குத் திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில்  வரும் 2ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், வங்கக்கடலில் தென்தமிழக கடலோரப்பகுதி, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் தற்போது மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசிவருவதாகவும், ஜூலை 2ம் தேதி வரை இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்