திருவண்ணாமலை மாவட்டத்தில் லாரியும் அரசு பேருந்தும் மோதி விபத்திற்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் பகுதியில் லாரியும் அரசு பேருந்தும், மோதி விபத்திற்குள்ளாகியது. இதில் முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் லாரியின் சுமை தூக்கும் தொழிலாளி ஆகிய 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், மற்றவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…