தமிழகத்தில் கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதித்து உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் உயர் கல்வித்துறை கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககம், மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கும் ஒரு கடித்த அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில், அனைத்து கல்லூரிகளிலும் பணியாற்றும் பேராசிரியர்கள் தங்களை மாணவர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டும் விதமாக ஓவர் கோட் எனும் மேலங்கியை அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
எனினும் இந்த மேலங்கி பேராசிரியர்களுக்கிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடையாக இருக்க வேண்டும் என்றும், பேராசிரியர்கள் தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கியை அணிய வேண்டும் என்றும் உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…