தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு முடிவடையும் நிலையில், இதற்கான காலக்கெடு வரும் ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மின்சார வாரியத்தின் மானியம் பெறும் மின் இணைப்பு எண்ணை கொண்டவர்கள் அனைவரும், தங்கள் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி தமிழக மின்சார வாரியம் உத்தரவிட்டது.
இதையடுத்து, நவ.28 ஆம் தேதி முதல் மின் இணைப்பு-ஆதார் இணைப்புக்கான செயல்முறை தொடங்கப்பட்டு மக்கள் அனைவரும் தங்கள் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். இதற்கான காலக்கெடு டிசம்பர் 31 ஆம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டது.
தற்போது வரை சுமார் 60 சதவீதம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தற்போது காலக்கெடு ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…