Mon ,Dec 11, 2023

சென்செக்ஸ் 69,928.53
102.93sensex(0.15%)
நிஃப்டி20,997.10
27.70sensex(0.13%)
USD
81.57
Exclusive

நிலக்கரி சுரங்கத்தில் விபத்து.. 41 பேர் துடிக்க துடிக்க பலியான பரிதாபம்!!

Sekar October 16, 2022 & 16:44 [IST]
நிலக்கரி சுரங்கத்தில் விபத்து.. 41 பேர் துடிக்க துடிக்க பலியான பரிதாபம்!!Representative Image.

துருக்கியின் வடக்கு பார்டின் மாகாணத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41ஐ எட்டியுள்ளதாக துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் தெரிவித்தார்.

முன்னதாக, உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு, வெடிவிபத்து ஏற்பட்டபோது சுரங்கத்தில் பணிபுரிந்த 110 பேரில் 58 பேர் குழுக்களால் மீட்கப்பட்டனர் அல்லது தாங்களாகவே வெளியேறினர் என்றார்.

10 பேர் பார்டின் மற்றும் இஸ்தான்புல்லில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஒரு சுரங்கத் தொழிலாளி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் சோய்லு கூறினார்.

சம்பவத்திற்கான காரணம் குறித்து துருக்கி அரசு விசாரணையைத் தொடங்கியுள்ளது. நிலக்கரிச் சுரங்கங்களில் உள்ள மீத்தேன் என்ற சொல்லைக் குறிக்கும் ஃபயர்டேம்பினால் வெடிப்பு ஏற்பட்டதாக ஆரம்ப அறிகுறிகள் தெரிவிக்கின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

எரிசக்தி அமைச்சர் பாதிஹ் டோன்மெஸ், சுரங்கத்தில் ஏற்பட்ட தீ பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், ஆனால் நிலத்தடியில் 350 மீட்டர்கள் ஆழத்தில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு தீயை தனிமைப்படுத்துதல் மற்றும் குளிர்விக்கும் முயற்சிகள் தொடர்வதாகவும் கூறினார்.

கடைசியாக 2014 இல், இஸ்தான்புல்லுக்கு தெற்கே 350 கிமீ தொலைவில் உள்ள மேற்கு நகரமான சோமாவில் துருக்கியின் மிக மோசமான சுரங்கப் பேரழிவில் 301 தொழிலாளர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்