கர்நாடகா மாநிலத்தில், ஏராளமான இளைஞர்கள் திருமணத்திற்குப் பெண் கிடைக்காமல் தவிப்பதாக சில தினங்களுக்கு முன்னர் தகவல் வெளியானது. இதில், இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அமைப்பு ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.
சமீபத்தில், திருமணமாகாத இளைஞர்கள் அனைவரும் ராஜா வேடம் அணிந்து ஊர்வலமாகச் சென்றனர். இந்த திருமணமாகாத இளைஞர்கள் அனைவருக்கும் வயது 30-க்கு மேலாகிறது. இதில், மாண்டியா மாவட்டத்தில் தான் அதிக அளவு திருமணமாகாத நபர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் மணப்பெண் கிடைப்பதற்காக முயற்சி ஒன்றை செய்துள்ளனர்.
அதன் படி, சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள சாமுண்டிஸ்வரி கோவிலுக்கு இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாத யாத்திர செல்ல தீர்மானித்து மாண்டியா தாலுக்காவில் இருந்து சுமார் 105 கி.மீ தொலைவில் உள்ள கோவிலுக்கு பாதயாத்திரை நடக்க உள்ளனர். இந்த பாத யாத்திரைக்கு பிரம்மச்சாரிகள் பாதயாத்திரை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது 3 நாள்கள் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.
திருமணமாகாதவர்கள் நடக்க உள்ள இந்த பாதயாத்திரை வரும் 23 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில், சுமார் 200 திருமணமாகாத இளைஞர்கள் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. மணமகள் வேண்டி 3 நாள்கள் செல்லும் இந்தப் பாதயாத்திரைக்கு இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், இதில் கலந்து கொள்பவர்களுக்கு 3 நாள்களும், 3 வேளை உணவும், தங்கும் இடங்களும் இலவசம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…