581 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டதாக பொய் கூறிய காவலரை கைது செய்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை அளவிட்ட போது, அதில் 581 கிலோ குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை எலிகள் சாப்பிட்டு விட்டதாக நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிலைக் கேட்டு டென்ஷனான நீதிபதி உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து கஞ்சாவை காவலர் விற்பனை செய்ததோடு, அந்த பழியைத் தூக்கி எலி மீது போட்டது அம்பலமாகியுள்ளது. தற்போது சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்கும் படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த செய்தியைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் “புளுகுறதுக்கு ஒரு அளவு வேண்டாமா? கிலோ கணக்கிலா பழியை தூக்கி எலி மேலயா போடுவீங்க?” என விமர்சித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…