Wed ,Dec 06, 2023

சென்செக்ஸ் 69,653.73
357.59sensex(0.52%)
நிஃப்டி20,937.70
82.60sensex(0.40%)
USD
81.57
Exclusive

தசரா நிகழ்வில் வெள்ளப்பெருக்கு…! ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பக்தர்கள்.. 8 பேர் உயிரிழந்த பரிதாபம்…!

Gowthami Subramani October 06, 2022 & 10:40 [IST]
தசரா நிகழ்வில் வெள்ளப்பெருக்கு…! ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பக்தர்கள்.. 8 பேர் உயிரிழந்த பரிதாபம்…!Representative Image.

தசரா நிகழ்வில், துர்கா சிலையை ஆற்றில் கரைக்கும் சமயத்தில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள ஜல்பைகுரியில், தசரா திருவிழா நடைபெற்றது. இதில், துர்கா சிலையை ஆற்றில் கரைப்பதற்கு சென்ற சமயத்தில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், 40-க்கும் அதிகமானோர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து நடந்த உடனேயே மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டு, சிலை கரைக்க வந்த பக்தர்கள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த விபத்தில் உயிரிழந்த 8 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்