கடந்த மூன்று ஆண்டுகளாக உலக மக்களை படாதபாடு படுத்திவந்த கொரோனா தொற்று சற்று குறைந்தநிலையில், மீண்டும் சீனாவில் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதற்கிடையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தத்திருந்த நிலையில், உருமாறிய ஒமிக்ரான் வகை தொற்றான XBB என்ற புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் உட்பட 9 மாநிலங்களில் இவ்வகை பாதிப்புகள் கண்டறியப்பட்டிருப்பதாக GISAID அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் 175 பேரும், மேற்கு வங்கத்தில் 103 பேரும் என நாடு முழுவதும் 380 பேர் XBB வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். XBB வகை கரோனா மாறுபாடு முதன்முதலில் சிங்கப்பூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் கண்டறியப்பட்டது. இதுவரை 17 நாடுகளில் இந்த பாதிப்பு பதிவாகியுள்ளது. ஒருவழியாக கொரோனா ஒழிந்தது என நினைத்து நிம்மதியாக மீண்டும் வழக்கம்போல் வாழ்க்கையை தொடங்கிய நாட்டு மக்களிடையே இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு பெரும் பீதியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…