வேலூர் மாவட்டத்தில் பன்னிரண்டாம் படித்து வரும் மாணவிக்கு காதல் தொல்லை அளித்து வந்த இளைஞனை பெற்றோர்கள் தாக்கியதால் கோபத்தில் அந்த இளைஞன் செய்த செயலால் பரபரப்பு.
வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு தொடர்ந்து சந்தோஷ் என்பவர் காதல் தொல்லை செய்து வந்துள்ளார். அதனை கண்டுகொள்ளாமல் தன்னுடைய படிப்பை மேற்கொண்ட மாணவிக்கு நாளுக்கு நாள் அவரின் தொல்லை அதிகரித்ததால் மிகவும் பயந்துள்ளார் அந்த மாணவி. எனவே, தன்னுடைய பெற்றோர்களிடம் இது குறித்து தெரிவித்துளளார். அவர்கள் சந்தோஷை தாக்கி இனிமேல் தங்களுடைய பெண்ணுக்கு எந்த தொல்லையும் செய்ய கூடாது என்று தெரிவித்தனர்.
இதில் ஆத்திரமடைந்த சந்தோஷ் அவனின் கூட்டாளிகளை கூட்டிக்கொண்டு அந்த மாணவியின் குடும்பத்தினரை கடுமையாக தாக்கியுள்ளனர். காயமடைந்து கிடந்த மாணவியின் குடும்பத்தினரை அக்கம் பக்கத்தினர் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனவே, சந்தோஷ் என்பவரை கைது செய்ய கோரி மாணவனின் பெற்றோர் அணைக்கட்டு பேருந்து நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவியின் உருவினர் ஒருவர் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொள்ள ஆரம்பித்தனர். இதில் அந்த மாணவியின் தந்தை குடியாத்தம் சிறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வருவது தெரிய வந்துள்ளது. மேலும் காவல் துறையினர் குடும்பத்திற்கு பாதுகாப்பில்லை என்ற போது பொது மக்களுக்கு என்ன நிலைமை என்று பலரும் பேசி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…