தலை முடி உதிர்விற்கு சிகிச்சை பெற்ற நபர், அது கொட்டிய நிலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவருக்கு நீண்ட காலமாக தலை முடி உதிர்வுப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால், இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இதில், மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலும், அவரது புருவம் மற்றும் மூக்கில் உள்ள முடிகளை இழந்தார்.
தலைமுடி உதிர்வு நின்று விடும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பிரசாந்த் மருந்துகளை உட்கொண்டார். ஆனால், தலை முடி உதிர்வது நிற்காத நிலையில் இருந்துள்ளது. இதனால், சில தினங்களுக்கு முன், மன வேதனையடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, இவர் எழுதியிருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. இதில், “என்னால் வீட்டை விட்டே வெளியில் வர முடியவில்லை. தலைமுடி உதிர்வுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் என்னுடைய தற்கொலைக்குக் காரணம்” என எழுதியுள்ளார்.
இதனையடுத்து, பிரசாந்த் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், டாக்டர் ரபிக் பற்றிய விசாரணை அவர்களுக்குத் திருப்திகரமாக இல்லை என தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறிய போது, இந்த சம்பவத்தில் முதன்மைக் குற்றங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…