சொமேட்டோ நிறுவனமானது டெலிவரி ஊழியர்களுக்கு நற்செய்தி ஒன்றை அறிவித்துள்ளது. இதன் மூலம், டெலிவரி ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
பொதுவாக, உணவு டெலிவரி செய்பவர்களுக்கு, பணியின் போது ஓய்வு இருக்காது. மேலும், அவர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று டெலிவரி செய்யும் போது அவர்களுக்கென எந்த வசதியும் இருக்காது. முழுவதுமாக ஓடி ஓடி உழைக்கும் போது அவர்களுக்கு மிகவும் கடினமான சூழல் ஏற்படும்.
இந்நிலையில், சொமேட்டோ நிறுவனம் அறிவித்த இந்த அசத்தல் திட்டமானது டெலிவரி ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைய உள்ளது. சொமேட்டோ நிறுவனத்தின் CEO ஆன, தீபிந்தர் கோயல், உணவு டெலிவரி செய்பவர்களுக்காக, பணியின் போது ஓய்வு எடுக்க பல்வேறு இடங்களில் ஓய்வு அறைகள் அமைக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
மேலும், Rest Point-களில் அதிவேக Wi-fi, சார்ஜ் செய்யும் வசதி, குடிநீர், முதலுதவி கிட், கழிவறைகள் போன்ற வசதிகள் இடம்பெறும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…