உலகளவில் காணப்படும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய நோய்களில் ஒன்றாக விளங்குவது புற்றுநோய் ஆகும். புற்றுநோய் உருவாவதற்குக் காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே எனக் கூறப்படுகிறது. புற்றுநோய்களில் பல்வேறு வகைகள் உள்ளன. இந்திய அளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5-ல் 1 பங்காக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நோயினால், பாதிக்கப்பட்டவர்களும், இந்த நோய் வராமல் இருப்பதற்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும், உணவு பழக்க வழக்கங்களையும் கையாள்வது அவசியம் ஆகும். அதனைப் பற்றி இதில் காண்போம்.
பொதுவாக புற்றுநோயானது குடிப்பழக்கம், புகைப்பிடித்தல் பழக்கம் கொண்டவர்களைப் பாதிக்கும். இது தீவிரமாகத் தாக்கக் கூடிய நோயாக இருந்து வருகிறது. இதற்கு நல்ல உணவு முறைகள் அவசியம். புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு பல்வேறு சிறந்த உணவுகள் உள்ளன. இவை அனைத்தும், புற்றுநோய்க்குக் காரணமான அதை உண்டாக்கும் செல்களை அழிக்கும் உணவுப் பொருள்களாக உள்ளன. இவை நம் அன்றாட வாழ்வில் உட்கொள்ளக் கூடியவையே ஆகும். இதில் புற்றுநோயை உண்டாக்கக் கூடிய செல்களை அழிப்பதற்கான உணவுகள் பற்றிப் பார்க்கலாம்.
நாள்தோறும், கேரட் சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை அதிகரிக்கும். இவை, நுரையீரல், வயிறு, குடல், சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படுவதைத் தவிர்க்க உதவுகிறது. தினமும் கேரட் சாப்பிடுவதன் மூலம், உடல் ஆரோக்கியத்தினை நன்றாக வைத்திருக்க முடியும்.
ஜீரண சக்தியாக விளங்கும் உணவுப் பொருளான பூண்டு, உடலில் பல்வேறு வகை மாற்றங்களை ஏற்படுத்த உதவுகிறது. இது உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியைத் தருகிறது. புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களை உண்டாக்கும் செல்களை அழிக்க உதவுகிறது.
பெரும்பாலும், அனைத்து வகையான உணவுகளில் தக்காளி பயன்படுத்துகிறோம். இதில் உள்ள வைட்டமின் சி எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோய் உண்டாவதைத் தடுக்க உதவுகிறது. மேலும், தக்காளியில் உள்ள லைகோபைன் வாயில் ஏற்படும் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதுவும் புற்றுநோயை எதிர்த்துப் போராடக்கூடிய சிறந்த உணவுப் பொருளாகும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகளாக உள்ள க்யூயர்சிடின் மற்றும் காம்ப்பெரால் புற்றுநோய் செல்கள் வளர்வதைத் தடுக்க உதவுகிறது.
உடலில் செல்கள் வலுவுடன் இருப்பதற்கு காளான் சாப்பிடுவது சிறந்தது. இது நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன், புற்றுநோய் எதிர்த்துப் போராடக் கூடிய திறனைக் கொண்டுள்ளது. இதன் செல்களை எதிர்த்துப் போராடுவதுடன், அவை பரவாமல் தடுக்கவும் உதவுகிறது.
பப்பாளியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் புற்றுநோயை எதிர்த்துப் போராடக் கூடிய சத்துக்களைக் கொண்டுள்ளன. எனவே அன்றாட வாழ்வில் பப்பாளி சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்தைத் தரும்.
திராட்சை பழத்தில் இருந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நோயெதிர்ப்பு அழற்சியாக, தோலில் மறைந்துள்ளது. இது புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
இயற்கையிலேயே அவகேடோ பழமானது ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் நிறைந்து காணப்படுகிறது. இவை புற்றுநோய்க்கு வழிவகுக்கக் கூடிய தேவையற்ற கொழுப்பு செல்களை உறிஞ்சி வெளியேற்ற உதவுகிறது. வாழைப்பழத்தை விட, அவகேடோவில் பொட்டாசியம் அதிக அளவு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…