சர்க்கரை நோய் வந்து விட்டால், வாய்க்கட்டுப்பாடு என்பது முக்கியமான ஒன்று. இயல்பான நேரத்தை விட, சர்க்கரை நோய் வந்த சமயத்திலே தான் அதிகமாக இனிப்பு சாப்பிடுவது போன்ற எண்ணங்கள் தோன்றும். ஆனால், இவையனைத்தையும் நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் மட்டுமே, நம்முடைய உடலின் இரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் சில முக்கிய உணவுப் பொருள்களை நமது அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு இயல்புக்கு மாறாக அதிகமாக இருக்கும். இதனால், பாலிஷ் செய்யப்பட்ட அரிசி உணவுகள், மைதா போன்றவை ரத்தத்தில் கார்போஹைட்ரேட் அளவை உடனடியாக அதிகரிக்கச் செய்துவிடும்.
இவ்வாறு சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சரியான அளவிலான உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்வதன் மூலம், சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். இவற்றில் சில உணவுகள் மற்றும் உணவுப் பழக்கம் போன்றவற்றைக் காணலாம். அதன் படி, உணவுப் பழக்கத்தை மாற்றுவதன் மூலம் இரத்தச் சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம்.
பொதுவாக சமைக்கப்படும் உணவுப் பொருள்களில் மஞ்சள் சேர்ப்பதன் மூலம், நம்முடைய உடலுக்கு ஒரு எதிர்ப்புச் சக்தியை தரும் என்று கூறப்படுகிறது. இதில், குர்குமின் என்ற வேதிப்பொருள் உள்ளது. கணையத்தில் உள்ள திசுவினுள், மேக்ரோபேஜ் என்ற தற்காப்பு செல்கள் நுழைந்டு, சைட்டோகைன்ஸ் என்ற அழற்சியை உருவாக்கக் கூடிய புரதத்தை சுரக்கிறது. இதன் காரணமாக இன்சுலினை உற்பத்தி செய்யக் கூடிய செல்கள் சேதமடைகிறது. இதனை குர்குமின் வேதிப்பொருளானது தடுத்து, இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது.
நம் வாழ்வில் அதிகமாக வெறுக்கக் கூடியதாக இருப்பினும், நம் உடலுக்கு நன்மை தரும் உணவுப் பொருளை பாகற்காய் என்றே கூறலாம். இதில், அதிக அளவிலான கால்சியம், இரும்புச்சத்து, போதுமான அளவு பீட்டாகரோட்டின் போன்றவை உள்ளது. இது உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதில் உள்ள கசப்புத் தன்மை, பெரும்பாலான பயன்களை அளிக்கிறது. பாகற்காய் சாற்றை, காலை நேரத்தில் வெறும் வயிற்றில் அருந்தி வர, சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள், அதிகமாக நார்ச்சத்து மிகுந்த உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்வதன் மூலம், உடலில் இரைப்பை, சிறுகுடலில் கார்போஹைட்ரேட் குளுக்கோஸாக மாற்றப்படுவதின் வேகத்தைக் குறைக்கிறது. இவ்வாறு குளுக்கோஸாக மாறுவது குறைவதன் மூலம், சர்க்கரை மற்றும் கொழுப்பு சேர்வதும் தடுக்கப்படுகிறது.
வளர்சிதை மாற்றத்தின் மூலமாக, நமது உடலில் வெப்பத்தை உருவாக்குவதில் பட்டை முக்கிய பங்காற்றுகிறது. உடலில் ஏற்படும் வெப்பத்தின் மூலம், தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, இயற்கையாகவே நம் உடலில் சுரக்கக் கூடிய இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும். அதன் படி, சர்க்கரை நோயாளிகள் பட்டையை உட்கொண்டால், ரத்த சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்தும்.
நட்ஸில், ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம், வைட்டமின்கள் தாது உப்புகள் போன்றவை நிறைந்து காணப்படுகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை, நட்ஸில் உள்ள நல்ல கொழுப்பு அகற்றி விடுவதால், உடலில் நல்ல கொழுப்பு நிறைந்து காணப்படும். மேலும், இதன் மூலம் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுவதுடன், இன்சுலின் சுரப்பும் சீராக அமையும். இதன் மூலம், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம்.
பீன்ஸ் சாப்பிடுவதன் மூலமும், இரத்தச் சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம். இதில் உள்ள அதிக அளவிலான நார்ச்சத்து உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றன. மேலும், இதன் மூலம் நமது உடலுக்குத் தேவையான ஆற்றலை பெற முடியும். இது நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தி, செரிமானத்தை சீராக்க உதவுகிறது. இதன் மூலம் இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும்.
பொதுவாக, உடலில் பல்வேறு நன்மைகளைத் தரும் வகையில் அமைவது வெந்தயம் ஆகும். இதனை நம் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் வெப்பத்தை சீராக வைத்திருக்க உதவும். இதில், நீர்ச்சத்து, கொழுப்புச் சத்து, புரதம், மற்றும் மாவுச் சத்து போன்ற அனைத்தும் உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள், வெந்தயத்தை தினமும் பொடியாக்கி தண்ணீர் அல்லது மோரில் கலந்து குடித்து வருவதன் மூலம், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும் எனக் கூறப்படுகிறது.
மூளை வளர்ச்சிக்கு உகந்த காய்கறி வெண்டைக்காய் ஆகும். இதன் மூலம், வெண்டைக்காய் ஃப்ளவனாய்டு சிறந்த மூலமாகும். இது நம் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், உடலுக்கு நன்மை அளிப்பதாக உள்ளது. இது சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…