வெயில் காலம் என்றாலே முதலில் நம் நினைவிற்கு வருவது இளநீர். இளநீரில் குடிப்பதால் பல நன்மைகள் உள்ளது. பல நோய்களை இந்த இளநீர் எளிதில் சரிசெய்து விடும். அப்படிப்பட்ட இந்த இளநீரிலிருந்து ஒரு இனிப்பான பாயாசம் ரெசிபி செய்தால் எப்படி இருக்கும் சூப்பராக இருக்கும். சரிவாங்க இந்த பதிவில் எல்லோருக்கும் பிடித்த இளநீர் பாயாசம் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
✤ இளநீர் – 1/4கப்
✤ சர்க்கரை – 1 கப்
✤ பால் -2 கப்
✤ கெட்டியான பால் - 1/4கப் தேவைக்கேற்ப (மில்க் மெய்ட்)
✤ முந்திரி – 1/4கப்
✤ நெய் – 1 டீஸ்பூன்
✤ ஏலக்காய் – சிறிதளவு
✤ தேங்காய் – 2 (இளம் தேங்காய்)
✤ தேங்காய்த் துருவல் – 2கப்
✤ இரண்டு இளம் தேங்காய் எடுத்து அதில் ஒரு தேங்காய் நன்றாகத் துருவிக் கொள்ளவும். மற்றொரு தேங்காயைச் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
✤ துருவிய தேங்காய் மற்றும் இளநீர் கால் கப் அளவிற்குச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் இரண்டு கப் அளவிற்குப் பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சிய கொள்ளவும்.
✤ அதில் தேவையான அளவிற்குக் கெட்டியான பால் (மில்க்மெய்ட்) மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறவும்.
✤ மற்றொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் முந்திரியைச் சிறிய துண்டுகளாக உடைத்து அதில் சேர்த்து வதக்கவும்.
✤ தேங்காய்ப் பால் செய்வதற்கு, துருவிய தேங்காய் இரண்டு கப் மற்றும் சிறிதளவு ஏலக்காய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
✤ அரைத்த கலவையை ஒரு துணியில் சேர்த்து நன்றாகப் பிழிந்து தேங்காய்ப் பால் எடுத்துக் கொள்ளவும்.
✤ இறுதியாக ஒரு பாத்திரத்தில் அரைத்த இளநீர் மற்றும் தேங்காய் சேர்த்து அதில் நறுக்கிய தேங்காயைச் சேர்த்துக் கொள்ளவும்.
✤ அதில் காய்ச்சிய பால் சேர்த்து அத்துடன், தேங்காய்ப் பால் சேர்த்துக் கொண்டு வறுத்த முந்திரியைச் சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொண்டால் சூடான சுவையான இளநீர் பாயாசம் தயார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…