இட்லிக்கும், தோசைக்கும் எப்போதும் சட்னி, சாம்பார் என ஒன்றையே சாப்பிடுவதை விட்டு, இட்லி பொடி தொட்டு சாப்பிடுவர். இந்த சுவையான இட்லி பொடியை நாம் வீட்டிலேயே எளிமையான முறையில் தயார் செய்யலாம். அதே நேரம், வீட்டிலேயே தயார் செய்யப்படும் இட்லி பொடியை 3 முதல் 4 மாதங்கள் வரையிலுமே கெடாமல் பார்த்துக் கொள்ளலாம். இட்லி, தோசையுடன் பொடி வைத்து சாப்பிடுவது வேலையும் குறைவாக இருக்கும். சாப்பிடுவதற்கு ருசியாகவும் இருக்கும். சரி, இதில் வீட்டிலேயே இட்லி மிளகாய் பொடி எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.
உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு
கறிவேப்பிலை – 1 கொத்து
மிளகாய் – தேவையான அளவு
✤ முதலில், இட்லி பொடி செய்வதற்குத் தேவையான பொருள்களை மேற்கூறியவாறு எடுத்துக் கொள்ளலாம்.
✤ இதில், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு உள்ளிட்டவற்றை பச்சை வாசனை போகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். குறிப்பாக, பருப்பைத் தீய விடாமல் லேசான பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.
✤ இதனைத் தொடர்ந்து, கருவேப்பிலையை நன்றாகக் கழுவி காய வைத்து சுத்தம் செய்து கொள்ளவும்.
✤ பின், சுத்தம் செய்யப்பட்ட கருவேப்பிலையை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை மிதமான தீயில் வறுக்கவும்.
✤ மிக்ஸி ஜாரில் பொடி அரைக்கும் போது, துளியும் ஈரம் இல்லாமல் சுத்தமாக எடுத்து வைக்க வேண்டும். இல்லையெனில் பொடி நமத்து போவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
✤ இவ்வாறு அரைக்கப்படும் போது, மிளகாய் பொடியை சொர சொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். லேசாக அரைப்பதை விட, சொர சொரப்பாக இருப்பதில் இட்லி பொடியின் சுவை கூடுதலாக இருக்கும்.
✤ இந்தப் பொடியை நெய் அல்லது நல்லெண்ணெயுடன் கலந்து இட்லி, தோசையுடன் பரிமாறலாம்.
✤ மேலும், சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
✤ இத்துடன் இட்லி பொடி அரைக்கும் போது, சிறிதளவு பெருங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். இது இட்லி பொடிக்கு கூடுதல் சுவையைத் தரும்.
✤ இவ்வாறு சுவையான மற்றூம் சூப்பரான இட்லி பொடி தயாராகி விடும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…