Japanese Encephalitis: ஏற்கனவே, கொரோனா, ஒமைக்ரான், தக்காளி காய்ச்சல், ஆந்த்ராக்ஸ், குரங்கம்மை, பன்றிக்காய்ச்சல், டெங்கு, இன்ஃபுளுயன்ஸா, சிக்கன்குன்யா என காய்ச்சல்கள் வரிசை கட்டி அடித்துக் கொண்டிருக்கின்றன. அதுவும் கொரோனாவால் உருவான பீதியே இன்னும் அடங்காத நிலையில் இப்போது 'ஜாப்பனீஸ் என்செஃபலிடிஸ்' என்ற புதிதாக காய்ச்சல் பரவத்தொடங்கியுள்ளது. இதை ஜப்பானிய மூளைக்காய்ச்சல் என்றும் சொல்வார்கள். அதென்ன ஜப்பானிய மூளைக்காய்ச்சல்? எப்படி பரவுகிறது? அறிகுறிகள் எப்படி இருக்கும்? தடுப்பு முறைகள் என்ன? என்பதை பற்றி பார்க்கலாம்.
மயோசைட்டிஸ் நோயின் காரணங்களும் அறிகுறிகளும்..
ஜாப்பனீஸ் என்செஃபலிடிஸ் என்றால் என்ன?
ஜாப்பனீஸ் என்செஃபலிடிஸ் என்பது மனிதர்களையும் விலங்குகளையும் தாக்கும் ஒரு வைரஸ் தொற்று நோயாகும். சுருக்கமாக சொல்ல வேண்டும்மென்றால், மூளையின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாகங்களில் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு வகை நோய். 'ஜாப்பனீஸ் என்செஃபலிடிஸ் வைரஸ்' என்ற வைரஸால் ஏற்படும் இந்நோய் கியூலெக்ஸ் (Culex) என்னும் ஒரு வகை கொசுக்களால் பரவுகிறது.
வெஸ்டிபுலர் ஹைபோஃபங்க்ஷன் என்றால் என்ன?
அறிகுறிகள்
பெரும்பாலான நோயாளிகளுக்கு இந்த நோயினால் எந்த அறிகுறிகளும் வெளிப்படுவதில்லை. இருப்பினும், இந்த வைரஸானது மனித உடலுக்குள் சென்ற 5 - 15 நாட்களில் பாதிப்பின் அறிகுறிகள் தென்படும். முக்கிய அறிகுறிகளாவன,
நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதும் உடனே உரிய சிகிச்சை அளிக்கவில்லையென்றால் மூளையில் வீக்கம், பக்கவாதம் போன்றவை ஏற்படுவதோடு உயிரையும் பறித்துவிடும்.
எப்படி பரவுகிறது?
பொதுவாக இந்த நோயை ஏற்படுத்தும் கொசுக்கள் கிராமப்புறங்களில் உள்ள ஆறு, கிணறு, கண்மாய், ஏரி போன்ற நீர்நிலைகளில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.
இந்த கொசுக்களுக்கு பன்றிகள், பறவைகளின் இரத்தம் தான் பிடிக்குமாம். அவற்றை கடிப்பதன் மூலம் கொசுக்களின் வீரியம் அதிகமாகும். அந்த சமயத்தில் மனிதர்களை கடித்தால் பாதிப்பு அதிகமாகும். பெரும்பாலும் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளை தாக்கக்கூடியது.
சிகிச்சைகள்
இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க எந்தவித குறிப்பிட்ட மருந்துகளும் இல்லை. நோயாளிகள் முதல்கட்டமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுவர். மேலும், இரத்தத்தில் உள்ள அணுக்களின் அளவு மற்றும் மூளைத் திரவம் ஆகியவை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதன் மூலம் நோயின் தீவிரம் தீர்மானிக்கப்படும். எதிர்காலத்தில் இந்த நோய் பாதிப்பு தொற்று ஏற்படாமல் இருக்க தடுப்பூசி கொடுக்கப்படலாம்.
தடுப்பு நடவடிக்கைகள்
குழந்தைகள், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் கொசுப் பெருக்கும் அதிகம் உள்ள நீர் நிலைகளுக்கு அருகில் போகாமல் இருப்பது நல்லது.
கொசுக்களால் வைரஸ் பரவுவதில் இருந்து பாதுகாக்க விரட்டிகள் மற்றும் கொசு வலைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
உடலை முழுவதும் மூடும் விதத்தில் உள்ள ஆடைகளை அணிவது நல்லது.
கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய நீர் தேக்கங்களை சுத்தம் செய்து கொசு மருந்து அடித்துவிடலாம். இவற்றை பின்பற்றுவதன் மூலம் கொசுவால் ஏற்படக்கூடிய மேலும் பல நோய்களில் இருந்தும் நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…