ஜவ்வரிசி என்றால் பாயாசம் தான் நாம் நினைவிற்கு முதலில் வருவது .ஆனால் ஜவ்வரிசியில் பொங்கல் என்றால் புதிதாக இருக்கும். இந்த பொங்கல் பண்டிகைக்கு உங்கள் வீட்டில் புதுவிதமான பொங்கலைச் செய்து அசத்துங்கள். சரிவாங்க ஜவ்வரிசி பொங்கலை சுலமாகவும், இனிப்பாகவும் எப்படிச் செய்வது என இங்குப் பார்க்கலாம்.
✥ நெய் - 50கிராம்
✥ பால் - 200 மிலி
✥ உலர் திராட்சை - 2டீஸ்பூன்
✥ ஏலக்காய் - 2டீஸ்பூன்
✥ முந்திரி -5டீஸ்பூன்
✥ வெல்லம்- 200 கிராம்
✥ ஜவ்வரிசி -300கிராம்
✤ முதலில் வெல்லத்தை எடுத்து நன்கு சிறிது சிறிதாக உடைத்து எடுத்து தனியாக வைக்கவும்.
✤ இரண்டு டீஸ்பூன் ஏலக்காய் எடுத்துக் கொண்டு விதைகள் வெளிவரும் வரை நன்கு தட்டி அதைத் தனியாக வைத்துக் கொள்ளவும்.
✤ ஒரு அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் தண்ணீர் சேர்த்து நன்றாக தண்ணீர் கொதித்த பின், ஜவ்வரிசி சேர்த்து அது நன்றாக வேக வைக்கவும்.
✤ வெந்த ஜவ்வரிசியுடன்,தட்டிய ஏலக்காய் மற்றும் உடைத்த வெல்லம் சேர்த்து நன்றாக வெல்லம் கரையும் கிளறிவிடவும்.
✤ மற்றொரு அடுப்பில் பாத்திரம் வைத்து நெய்யை ஊற்றி,சூடான பிறகு முந்திரி திராட்சை சேர்த்து நன்றாகப் பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
✤ ஜவ்வரிசி பொங்கலானது கொட்டியான பொங்கல் பதத்திற்கு வந்த பிறகு, அதில் நெய் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.
✤ அத்துடன் பால் சேர்த்துக் கொண்டு நன்றாகக் கிளறிவிட்டுக் கொண்டு ,அடுப்பைச் சிறிய தீயில் வைக்கவும்.
✤ பால் நன்றாகக் கலந்த பின் அதில் வறுத்து வைத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கொண்டு, சிறிது சிறிதாக நெய் சேர்த்துக் கிளறி இறக்கினால், ஜவ்வரிசி பொங்கல் தயாரனது. அதில் அழகிற்காக பொங்கலின் மேல் முந்திரி, திராட்சை சிறிது சிறிதாக துருவி தூவி விட்டு பரிமாறலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…