ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் தள்ளி போவதை வைத்து தான் கருவுறுதலையே உறுதிப்படுத்துவார்கள். அப்படி இருக்கும் போது கனவோடு தனது குழந்தையை பற்றி சிந்தித்துக் கொண்டு மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் போது ரத்தகசிவை கண்டால் நிச்சயம் பயப்பட தான் செய்வார்கள். வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஏதேனும் ஆகியிருக்குமோ அல்லது கர்ப்பபையில் ஏதேனும் பிரச்சனை இருக்குமோ என திணறிவிடுவார்கள்.
ப்ரக்னன்சி டெஸ்ட் எடுப்பதற்கு சிறந்த நேரம் இதுதான்...எல்லா பெண்களும் தெரிஞ்சுக்கணும்...
முதல் மூன்று மாதத்தில் இரத்தப்போக்கு
இந்த மாதிரி சமயத்தில் மருத்துவரிடம் சென்றாலும் மனதில் ஒரு பயம் இருக்கத்தான் செய்யும். ஆனால், இதற்கான காரணம் இது தான் என்று தெரிந்துக் கொண்டால் பயப்படாமல் இருக்கலாம். கர்ப்பிணி பெண்கள் மட்டுமல்ல எல்லா பெண்களும் இதை பற்றி தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இப்போது கர்ப்பக்காலத்தின் முதல் மூன்று மாதத்தில் இரத்தப்போக்கு (first trimester bleeding in tamil) ஏற்படுவதற்கான காரணத்தை பற்றி பார்க்கலாம்.
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களுக்கு உங்களை வரவேற்கிறோம். இது ஒரு அற்புதமான பயணத்தின் தொடக்கமாகும். கர்ப்பக்காலத்தின் மூன்று ட்ரைமெஸ்டர் காலங்களிலும் ஒவ்வொரு விதமான அறிகுறிகள் இருக்கும். இவை எல்லாமே கர்ப்பக்காலத்தில் மட்டுமே இருக்க கூடியவை. மேலும், இம்மாதிரியான அறிகுறிகள் தீவிரமாக இருக்கும் போது மருத்துவரை சந்திப்பதை தவிர்க்க கூடாது. அப்படியான அறிகுறிகளில் கர்ப்பகால இரத்தப்போக்கும் ஒன்று.
முதல் மூன்று மாதத்தில் கர்ப்பிணிகள் இந்த விஷயங்களை மட்டும் தெரியாம கூட செஞ்சிடாதீங்க...!
பயப்படத் தேவையில்லை
பொதுவாக ஒரு பெண் கருவுற்ற இரண்டு வாரங்களில் 10 முதல் 15 நாட்களீல் லேசாக ரத்தகசிவு இருக்கும். இதனால், பயப்பட தேவையில்லை. ஏனெனில், இந்த நேரத்தில் தான் கருமுட்டை கருப்பையின் உட்சுவரினுள் சென்றடையும். இதனால், ரத்தபோக்கு உண்டாகும். இது இயல்பாகவே சரியாகிவிடும். இது பற்றி தெரியாமல், பலரும் இதை மாதவிலக்கு என்றும் நினைப்பார்கள். மேலும், ஒரு சிலர் இது கருச்சிதைவு என்றும் பயப்படுவதுண்டு. கருவுற்ற தொடக்கத்தில் கர்ப்பபைக்கு இரத்த ஓட்டம் அதிகமாக செல்லும். அதனால் கர்ப்பப்பை இருக்கும் பகுதி இரத்தம் போன்று சிவப்பாக மிருதுவாக (first trimester bleeding definition )இருக்கும்.
பொய் கர்ப்பம் அல்லது தவறான கர்ப்பம்
முதல் மூன்று மாதத்தில் இரத்தப்போக்கு இருந்தால், அது பொய் கர்ப்பம் அல்லது தவறான கர்ப்பமாக இருக்கலாம். அதாவது, கருமுட்டை கருப்பையில் பதியாமல் கருக்குழாயில் உள்ளே வளரத்தொடங்கும். இது ரொம்ப நாட்கள் கருகுழாயில் வளர முடியாது. இதனால் கூட உதிரபோக்கு (first trimester bleeding causes) இருக்கும். ஆனால், இது அதிகமான இரத்தபோக்கை உண்டாக்கும். இவ்வாறு நிகழும்போது, அடி வயிற்றில் வலி, மயக்கம், தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
எப்போது கவனம் தேவை
லேசான இரத்தப்போக்கு இல்லாமல் அதிகமாகவோ அல்லது தொடர்ந்து இரத்தப்போக்கு ஏற்பட்டால் அது கருச்சிதைவு என்று அர்த்தம். கருவுற்ற பெண்களின் 20-30% பேருக்கு இவ்வாறு நடக்கிறது. பெரும்பாலும் இது கருவுற்ற முதல் மூன்று மாதங்களில் நடக்கிறது. எனவே, தாமதிக்காமல் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். அப்போது, மருத்துவர் குழந்தையின் இதயத்துடிப்பை கண்டறிந்து அது சீராக இருந்தால் இரத்தபோக்கிறகு தகுந்த சிகிச்சை அளிப்பார்கள். அதுவே, கருச்சிதைவாக இருந்தால் அதற்கு உண்டான சிகிச்சை (bleeding during pregnancy) அளிப்பார்கள்.
கர்ப்பக்காலத்தின் முதல் மூன்று மாதத்தில் தேவையான அளவு ஓய்வு எடுத்தாலே போதும். இரத்தப்போக்கு குறைந்து விடும். இல்லையென்றால், மருத்துவரின் கண்காணிப்பில் மருத்துவமணையில் இருக்க வேண்டும்.
பொறுப்பு துறப்பு: கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக் கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளைத் தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around Web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…