கேப்டனாக கடைசி சீசன் என தோனி கூறிய நிலையில், இல்லை அடுத்த ஆண்டும் தோனிதான் சிஎஸ்கே கேப்டன் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். உண்மையில் தோனி அடுத்த ஆண்டும் கேப்டனாக இருப்பாரா? குறைந்தபட்சம் அணியில் விளையாடுவாரா என கேள்வி எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 15வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் நடத்தப்படாமல் 3 மைதானங்களிலேயே போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை தோனி தலைமையின் கீழ் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த முறை முதல் முறையாக ஜடேஜா தலைமையில் களமிறங்கியது. ஆடிய அனைத்து போட்டிகளிலும் கிட்டத்தட்ட தோல்வியைத் தழுவியதை பார்க்கமுடிந்தது. இடையில் இரண்டு போட்டிகள் மட்டுமே ஆறுதல் அளிக்கும் வகையில் வெற்றியாக அமைந்தது.
இந்நிலையில், நடப்பு சீசனின் உச்சகட்ட பரபரப்புக்கு மத்தியில் தானாக முன்வந்து ஜடேஜா தனது கேப்டன்சி பொறுப்பை தோனிக்கு தந்துள்ளார். அணியின் வெற்றி ஒன்றே நோக்கம் என்பதால் தோனி இம்முறை கேப்டனாக களமிறங்கினார். களமிறங்கிய முதல் ஆட்டத்திலேயே வெற்றி தேடி தந்துள்ளார் கேப்டன் தோனி. இந்த சீசன்தான் தோனி கேப்டனாக கடைசியாக விளையாடுகிறார் என ஒரு தரப்பும், அவர் விளையாடும் கடைசி சீசன் என ஒரு தரப்பும் பேசி வருகின்ற நிலையில், உண்மையிலேயே லீக் தொடர்களிலிருந்து தோனி விடைபெறுகிறாரா என்கிற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
தோனியிடம் கேட்டதற்கு இந்த மஞ்சள் உடையா இல்லை வேறு மஞ்சள் உடையா தெரியாது என குழப்பமாக பதில் கூறினார். இதனால் அவர் விளையாடுவாரா இல்லை மெண்டராக இருப்பாரா என ரசிகர்கள் குழம்பியுள்ளனர். ஆனாலும் எது எப்படியோ சென்னை அணிக்கு கேப்டன் தோனிதான். என்ன அடுத்த சீசன் விளையாடவில்லை என்றால் அவர் வெளியிலிருந்து கேப்டன்சி செய்வார் என ரசிகர்கள் கூறியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…