இந்திய டெலிகாம் நிறுவனங்கள் 5g சேவையை செயல்படுத்த முடிவு செய்தனர். 4g சேவையில் இருந்து 5gக்கு தங்கள் நெட்வோர்க்கை மாற்ற அனைத்து முன்னணி டெலிகாம் நிறுவனங்களும் முயற்சி செய்து வந்தது,அதில் Jio இன்று 5G சேவையை தொடங்கி வைத்தது.
தமிழ்நாட்டில் ஆறு முக்கிய நகரங்களில் இன்று முதல் Jio 5G சேவையை செயல்படும். Jio 5G சேவையை தமிழக தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் திறந்து வைத்தார். மேலும் விழாவில் பேசிய மனோ தங்கராஜ் "தமிழ்நாட்டில் Jio 5G சேவையைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி" என்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய Jio நிறுவனம் "தமிழ்நாட்டில் இன்னும் 6 நகரங்களில் Jio True 5g யை இன்னும் 6 நகரங்களில் விரிவாக்கம் செய்வதில் உற்சாகம் கொண்டுள்ளதாக" தெரிவித்தது. 100 நாட்களில் 101 நகரங்களில் Jio நிறுவனம் 5gயை அறிமுகம் செய்துள்ளது.
சேலம், மதுரை, திருச்சி, கோவை, ஒசூர், வேலூர் ஆகிய 6 நகரங்களில் இன்று முதல் Jio 5G சேவை செயல்படும். தமிழ்நாட்டில் 5G சேவையை செயல்படுத்த Jio 40,446 கோடி முதலீடு செய்துள்ளது, மேலும் அடுத்த 6 மாதத்தில் இன்னும் 6 நகரங்களில் அறிமுகமாகும். இதனால் மிக விரைவில் தமிழக முழுவதும் Jio 5G சேவை அனைத்து ஊர்களிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…