ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் தகுதியான ஊழியர்களுக்கு 5.11 லட்சத்திற்கும் அதிகமான பங்குகளை ஒதுக்கீடு செய்துள்ளது.
ஐடி நிறுவனங்களில் ஊழியர்களை ஊக்குவிக்கவும், அவர்கள் செய்யும் வேலையை பாராட்டி அவர்களுக்கு பரிசளித்து மகிழ்வது வழக்கம். ஆனால் இன்ஃபோசிஸ் நிறுவனம் ஒரு படி மேலே சென்று, மே 12 ஆம் தேதி அன்று இரண்டு திட்டங்களின் கீழ் ஊழியர்களுக்கு நிறுவனத்தின் பங்கினை ஒதுக்கீடு செய்துள்ளது. இது நிறுவனத்தில் ஊழியர்களின் உரிமையை விரிவுபடுத்துவதற்காகவும், அவர்களின் செயல்திறனுக்கான வெகுமதியாகவும் அளிப்பதற்கு மேற்கொள்ளப்பது என்று கூறப்படுகிறது.
மே 14 அன்று, இன்ஃபோசிஸ் அதன் பரிமாற்றத் தாக்கல் செய்ததில், "தகுதியுள்ள ஊழியர்களால் கட்டுப்படுத்தப்பட்ட பங்கு அலகுகளைப் பயன்படுத்துவதற்கு ஏற்ப, மே 12, 2023 அன்று நிறுவனம் 5,11,862 பங்குகளை ஒதுக்கியுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தெரிவித்தனர். ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த பங்குகளில் - 1,04,335 பங்குகள் 2015 பங்கு ஊக்க இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டன மற்றும் மீதமுள்ள 4,07,527 பங்கினை இன்ஃபோசிஸ் விரிவாக்கப்பட்ட பங்கு உரிமையாளர் திட்டம் 2019 இன் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது.
மே 12 அன்று இன்ஃபோசிஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், சந்தா பெற்ற பங்கு மூலதனம் ₹ 20,749,373,460/- ஆக உயர்ந்தது, ஒவ்வொன்றும் ₹5/- என்ற 4,149,874,692 ஈக்விட்டி பங்குகளாகப் பிரிக்கப்பட்டது. இன்ஃபோசிஸ் இந்தியாவில் மூன்றாவது பெரிய நிறுவனமாகவும், சந்தை மதிப்பின் அடிப்படையில் ஐடி பிரிவில் இரண்டாவது பெரிய நிறுவனமாகவும் உள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ₹5.16 லட்சம் கோடிக்கு மேல் உள்ளதக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…