இந்தியா பழமை வாய்ந்த பல சாம்ராஜ்ஜியங்கள் ஆண்ட வளமையான பூமி ஆகும், வெவ்வேறு காலகட்டத்தில் பல மன்னர்கள் ஆண்ட பாரதம் பின் ஆங்கிலேயர் கைப்பிடிக்குச் சென்று சுதந்திரம் பெற்று ஜனநாயக நாடாகப் புத்துயிர் பெற்றது. இந்த ஜனநாயக இந்தியாவில் பல அற்புதமான பிரமாண்டமான கட்டிடக்கலைகள் உள்ளன, அவை பல்வேறு சுற்றுலா ஸ்தலமாகவும் உள்ளது. இவ்வாசகத்தில் நம் பாரத திருநாட்டில் கம்பீரமாக நிற்கும் உயர்ந்த 10 சிலைகளைப் பற்றிக் காண்போம்.
1.ஒற்றுமைக்கான சிலை( Statue of Unity) 182 m
இந்தியத் திருநாடு பல கலாச்சாரம், மொழி, மதம் என வேறுபட்டாலும் மக்கள் "வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது சிறப்பாகும். சுதந்திர இந்தியாவை மாநிலமாக வகுத்து இந்திய நாட்டின் அரசு அமைக்க முக்கிய காரணமாக இருந்த திரு. சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் 31.10.2018 அன்று நர்மாதா ஆற்றின் அனையின் அருகே திறந்த சிலையே ஒற்றுமையின் சிலை ஆகும். 56 மாதங்கள் கடின உழைப்பில் உருவான இந்த 597 அடி (182 m) சிலையே நம் நாட்டின் மிகப்பெரிய சிலை ஆகும்.
2.பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை (Panchamuga Anjaneya Statue) 49 m
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் பசவேசுரா மடத்தில் அமைக்கப்பட்ட 161 அடி பஞ்சமுக ஆஞ்சநேய சிலை உள்ளது. தங்க நிறத்தில் கம்பீரமாக நிற்கும் அனுமனின் சிலை பார்க்கத் தூண்டும். இந்த சிலை 10.04.2022 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
3.வீர அப்ஹய ஆஞ்சநேய ஹனுமான் சிலை (Veera Abhaya Anjaneya Hanuman Swami) 41 m
சிவனின் அவதாரமான சிரஞ்சிவீ அனுமனின் திருத்தலமான ஆந்திர மாநிலத்தில் விஜயவாடா மாவட்டம் பரிடலாவில் உள்ள வீர அப்ஹய அனுமன் சிலை 135 அடி உயரம் கொண்டதாகும்.
ராமனின் பக்தன் அனுமன் சங்கடங்களைத் தீர்க்கும் சீரஞ்சிவீ ஆவார், தன்னை நாடியவருக்கு உதவி செய்வதில் அனுமன் சிவனின் கருணை உருவாகும்.
4. திருவள்ளுவர் சிலை (Thiruvalluvar Statue) 40 m
உலகப் பொதுமறை அளித்த அய்யன் திருவள்ளுவன் ஏறுபோல் கம்பீரமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்தியப் பெருங்கடல் நோக்கிய 133 அடி உயரம் கொண்டு அமைந்திருக்கும் சிலையே திருவள்ளுவரின் சிலை ஆகும், அவர் உருவாக்கிய 1330 குறள்கள் கொண்ட 133 அதிகாரம் குறிக்கிறது.
Most Read: நம்ம நாட்டுக்கு பெருமை சேர்த்த இடங்கள்… இந்த இடத்துக்கெல்லாம் நீங்க போயிருக்கீங்களா?
5. பத்மசாம்பவர் சிலை (Statue of Padmasambhava) 37.5 m
இமாச்சல் மாவட்டம் மண்டி மாவட்டம் ரெவால்ஸர் நீர் நிலையின் அருகில் அமைந்த புத்த குருவான பத்மசாம்பவர் சிலை 123 அடி உயரம் கொண்டதாகும். புத்த மதத்தினர் தந்கள் மன சாந்திக்காக இங்கு வந்து தவம் இருப்பது வழக்கமாகும்.
6. முருதீசுவரர் சிலை (Lord Shiva of Murudeshwara) 37 m
இருசக்கர வாகனத்தில் பயணம் செய்பவர் அதிகம் வரும் மத ஸ்தலம் கர்நாடக மாநிலத்தில் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள 122 அடி உயரம் கொண்ட சிவனின் சிலை அதிகமான சிவ பக்தர் வரும் மத ஸ்தலத்தில் ஒன்றாகும். அரபிக் கடல் கடற்கரையில் இருக்கும் இந்த சிலையின் அழகு மீண்டும் பார்க்கத் தூண்டும்.
7.பதம்சாம்பவ குரு சிலை (Padmasambhava Guru Rinpoche) 36 m
சிக்கிம் மாநிலத்தில் நம்கி என்னும் ஊரில் அமைந்த புத்த குரு பத்மசாம்பவரின் 118 அடி கொண்ட சிலை இந்தியாவின் பெரிய சிலைகளில் ஒன்றாகும். இந்த புத்த ஸ்தலம் அனைத்து மதத்தினரும் வரும் சுற்றுலாத் தலத்தின் ஒன்றாகும்.
8.ஆதியோகி சிவன் (Adiyogi Shiva Statue) 34 m
தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் ஈசனுக்கு அமைத்த 112 அடி கொண்ட ஆதியோகி சிலை, கோவையில் முக்கியமான சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. இந்த ஸ்தலத்தில் மகாசிவராத்திரி அன்று சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கமாகும்.
9.அகிம்சையின் சிலை (Statue of Ahimsa) 33 m
தன் பசிக்காக மற்ற உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என உயரிய கொள்கை கொண்ட ஜயினிஸ்ஸ மதத்தின் தன்மையை வெளிக்காட்டும் 108 அடி உயரம் உள்ள அகிம்சை சிலை மிகவும் பிரசத்தி பெற்றது.
10. பசவா சிலை (Basava Statue) 33 m
கர்நாடக மாநிலத்தில் பிடர் என்னும் மாவட்டத்தில் அமைந்த 116 அடி உயரம் கொண்ட பசவா சிலை, கி.பி 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆன்மீக புலவர், சமூக சீர்திருத்தாளர் பசவேஸ்ரா அவர்களின் நினைவாக உருவாக்கப்பட்டதாகும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…