பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட 5 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6 வீதம் மத்திய அரசு குறைத்தது. இந்நிலையில் பெட்ரோல் விலையை குறைப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக அரசு எப்போது விலையை குறைக்கும் என எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினர்.
இதனைதொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி திமுக அரசுக்கு எதிராக கோட்டையை நோக்கி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், போரட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை உள்பட 5 ஆயிரம் பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், அரசு அதிகாரி உத்தரவை மீறி செயல்படல் உள்ளிட்ட 3 பிரிவிகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக காவல்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…