தஞ்சாவூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற 6 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 2 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மீதியுள்ள 4 பேரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சார்லஸ் (வயது 58) என்பவர் பிரதீவ் ராஜ் (36), பிரவீன் ராஜ் (19), தாவீது (30), ஈசாக் (39), தெர்மஸ் (19) உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோருடன் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி மாதா பேராலயத்திற்கு நேற்று மாலை சென்றுள்ளனர்.
அவர்கள் அனைவரும் இரவில் அங்கேயே தங்கிய நிலையில், இன்று காலை சார்லஸ், பிரதீவ்ராஜ், பிரவீன்ராஜ் உள்பட 6 பேர் மாதா கோவில் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது திடீரென தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் 6 பேரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் 6 பேரையும் தேடினர். அப்போது சார்லஸ் மற்றும் பிரதீவ்ராஜ் ஆகிய 2 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மற்ற 4 பேரின் கதி என்னவென்று தெரியாத நிலையில் அவர்களும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…