யானை ஒன்று பானிபூரியை விரும்பிய படி, தும்பிக்கையை நீட்டி வாங்கி சாப்பிடும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. யானை பழம் மட்டும் தான் சாப்பிடும் என்ற கதை போய், இப்போது பானிபூரி சாப்பிடும் காலம் வந்து விட்டது. மனிதனுக்கு மட்டுமா தெரியும் பானிபூரி ருசி. இப்போது யானைக்கும் பானிபூரி ருசி தெரிந்து விட்டது.
மனிதரோடு, தெருவோரத்தில் உள்ள பானிபூரி கடையில் யானை பானிபூரி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பானிபூரியாக கடைக்காரர் எடுத்துக் கொடுக்கும் வரை, காத்திருந்து தனது தும்பிக்கையால் அதனை வாங்கி அழகாக வாயில் போட்டுக் கொள்கிறது. இது மிகவும் பெரிய குழந்தை என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…