ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் நாளை முதல் 5 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
அக்டோபர் 4 ஆம் தேதி ஆயுத பூஜையும், அக்டோபர் 5 ஆம் தேதி சரஸ்வதி பூஜையும் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு தொடர் விடுமுறை அறிவித்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும். இதில், அக்டோபர் 3 ஆம் தேதி விடுமுறைக்கு பதிலாக அக்டோபர் 8 ஆம் தேதி கல்லூரிகள் வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…