சிதம்பரம் பேருந்து நிழற்குடையில் கல்லூரி மாணவன் ஒருவன் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீப காலமாக, மாணவ, மாணவிகளின் அத்துமீறல் செயல்கள் சில வீடியோ காட்சிகளாக வலைதளங்களில் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி வளாகத்தில் புகை பிடிப்பது, மாணவிகள் பீர் அருந்துவது, பொது இடங்களில் சண்டை போடுவது உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையத்தின், பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்குள்ள நிழற்குடையில் பள்ளிச் சீருடையில் உள்ள மாணவிக்கு, தனியார் பாலிடெக்னிக் படித்து வரும் மாணவன் ஒருவன் தாலி கட்டியுள்ளான். இதில், பூவிற்கு பதிலாக காகிதங்களை கிழித்து அவர்கள் மீது வீசியுள்ளனர். இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…