சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை புதிய சம்மன் ஒன்றை அனுப்பியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு' வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஜூன் 8ம் தேதி ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட சோனியா காந்தி, விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட அமலாக்கத் துறை, சோனியா காந்தியை ஜூன் 23ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு புதிய சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் ஜூன் 13ம் தேதி சோனியாகாந்தியின் மகன் ராகுல்காந்தி ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…