ஆங்கிலம் படிக்க வரவில்லலை என்று 4 வயது சிறுவன் மீது ஆசிரியர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
கேரளா கோச்சி அருகே அகில் என்ற ஆசிரியரிடம் 4 வயது சிறுவன் டியூசன் படித்து வந்துள்ளான். சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது சிறுவன் உடலில் தழும்புகள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரித்ததில், ஆங்கிலம் படிக்க வராததால் டியூசன் ஆசிரியர் தன்னை சரமாரியாக அடித்து, யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என்று மிரட்டியதாக கூறியுள்ளான். சிறுவனை தாக்கியது, அதை கேட்கச்சென்றபோது மிரட்டல் விடுத்தது குறித்து சிறுவனின் தாயார் போலீசில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டியூசன் ஆசிரியர் அகிலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…