Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

பாம்பு கடித்த 7 சிறுவன் உயிரிழப்பு.. ஆம்புலன்ஸ் வரமறுப்பு.. மகன் உடலை தோளிலே வைத்து சென்ற தந்தை…

Gowthami Subramani October 12, 2022 & 13:50 [IST]
பாம்பு கடித்த 7 சிறுவன் உயிரிழப்பு.. ஆம்புலன்ஸ் வரமறுப்பு.. மகன் உடலை தோளிலே வைத்து சென்ற தந்தை…Representative Image.

பாம்பு கடித்து இறந்த சிறுவனின் உடலை ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ் வர மறுத்ததால், சிறுவனின் தந்தையே தனது தோளில் சுமந்த காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.

ஆந்திரமாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள புனித நகரமாக விளங்கும் ஸ்ரீகாளஹஸ்தி அருகே உள்ள திருவபுத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் செஞ்சய்யா. இவருக்கு 7 வயதில், பசவையா என்ற மகன் உள்ளார். பசவையா, அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர்கள் விவசாயம் செய்யும் நிலத்திற்கு அருகிலேயே வீடுகட்டி வசித்து வருகின்றனர். வழக்கம் போல, நேற்று 6 மணியளவில் குடும்பத்தினரோடு விவசாய வேலை பார்த்து வந்த நிலையில், அவரது மகன் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். இந்த சமயத்தில் அங்கிருந்து எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று அந்த சிறுவனை கடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக சிகிச்சைக்காக கிராமத்திற்கு அருகில் உள்ள முதன்மை சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், தீவிர சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளான்.

இதனையடுத்து, சிறுவனின் உடலை வீட்டுக் கொண்டு செல்ல 108 ஆம்புலன்சைத் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், அவர்கள் சிறுவனின் உடலை ஏற்றிச் செல்ல மறுத்துள்ளனர். பிறகு ஆட்டோ, வண்டி உள்ளிட்டவையும் மறுத்துவிட, பசவையாவின் உடலை தானே தோளில் சுமந்தபடி சென்றுள்ளார் செஞ்சய்யா. இந்த சம்பவம் காண்போரை பெரும் சோகத்தில் ஏற்படுத்தியதோடு, கண்கலங்க வைத்தது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்