நாமக்கல் மாவட்டத்தில் முதன் முதலாக பெண் ஒருவர் நடத்துநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த பழனியப்பனூர் பகுதியை சேர்ந்த , பயனச்சீட்டு பரிசோதர் முனியப்பன் உடல்நலக்குறைவு காரணமாக, பணியில் இருக்கும் போதே உயிரிழந்தார். இந்நிலையில் வாரிசு அடிப்படையில் அவரது மகள் ராணி 34 என்பவருக்கு நாமக்கல் மாவட்ட அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாதமாக பயிற்சி பெற்று வந்த இளைய ராணி நகர பேருந்தில் நடத்துநராக நியமிக்கப்பட்டுள்ளார். ராசிபுரம் To சேலம் 52Lss என்ற எண் கொண்ட பேருந்தில் பணியில் ஈடுபட்டு வரும் இவர் ஆர்வத்துடனும் சுறுசுறுப்பாகவும் பணியாற்றி வருவது பயணிகளிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…