மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடையவுள்ளதால் கடலுக்கு செல்ல மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், இந்தாண்டிற்கான 61 நாள் மீன்பிடி தடைக்காலம், கடந்த ஏப்ரல் 15ம் தேதி துவங்கியது. இந்நாட்களில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளை பயன்படுத்தக்கூடாது. மீன்பிடிக்க கட்டுமரத்தில் மீனவர்கள் சென்று வந்த நிலையில், இன்றுடன் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைகிறது. இதனையடுத்து நாளை முதல் மீன்பிடிக்க செல்லலாம் என்பதால் மீனவர்கள் உற்சாகத்துடன் படகுகளை தயார் படுத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…