முன்னாள் மிஸ் பிரேசில் அழகி Gleycy Correia 2 மாதங்களாக கோமாவில் இருந்த நிலையில் இன்று மரணமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
டான்சில்ஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட Gleycy Correia பக்க விளைவு காரணமாக 2 மாதங்களாக கோமாவில் இருந்த நிலையில் அவர் மரனமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தென்கிழக்கு நகரமான Macaé ஐச் சேர்ந்த Gleycy Correia அழகு நிபுணராகப் பணிபுரிந்தார். அழகி பட்டம் வென்ற பிறகு, அவர் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமடைந்தார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 57,000க்கும் அதிகமான பலோவர்ஸ் உள்ளனர். அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். Gleycy Correia 2018 ஆம் ஆண்டில் மிஸ் யுனைடெட் கான்டினென்ட்ஸ் மிஸ் பிரேசில் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…