குஜராத்தில் ஆற்றில் தவறி விழுந்த இளைஞரை முதலை கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் பத்ரா என்னும் இடத்தில் தாதர் ஆறு உள்ளது. இந்த ஆற்றை 30 வயது இளைஞர் கடக்க முயன்ற போது, தவறி ஆற்றில் விழுந்தார். ஆற்றில் விழுந்த அவரை முதலை கடித்து குதறத்தொடங்கியது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் முதலையிடம் இருந்து இளைஞரை காப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால், உடலைவிட மறுத்து முதலை ஆற்றில் மூழ்கிய நிலையில், காணாமல் போன இளைஞரின் சடலத்தை தேடும் பணியில் உள்ளூர் மக்களுடன் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…