தமிழகத்தில் கொளுத்தும் வெயில் காரணமாக டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 28ம் தேதி முடிவடைந்தது. அக்னி நட்சத்திரம் முடிவடைந்த போதிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில் வெயில் காரணமாக தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் தினமும் 85 கோடி முதல் 90 கோடி வரை வசூலாகி வருகிறது. அதில் பீர் மட்டும் 25 கோடிக்கு விற்பனையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் பீர் விற்பனை 30 சதவீதம் வரை அதிகரிக்கும். ஆனால் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…